அஜ்மான் துறைமுகத்தில் சம்பளமின்றி தவித்த கப்பல் ஊழியர்களுக்கு இந்திய கன்சுலேட் உதவி
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது எம்.வி. ஹோம் எனும் கப்பல். இக்கப்பலில் 11 இந்தியர்கள், 2 மியான்மர் நாட்டவர், ஒரு நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததைத் தொடர்ந்து அவர்கள் இந்திய கன்சுலேட்டின் உதவியை நாடினர். அதனைத் தொடர்ந்து இந்திய கன்சுலேட் கப்பலின் உரிமையாளரிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து அவர்களுக்கு சம்பள பாக்கிகள் வழங்கப்பட்டது.
இதற்காக கப்பலில் பணிபுரிந்த ஊழியர்கள் இந்திய கன்சுலேட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
11 இந்தியர்களில் ஏழு பேர் தாங்கள் தாயகம் செல்ல விரும்புவதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications