கலிபோர்னியாவில் இந்திய பல் மருத்துவ மாணவி சுட்டுக் கொலை
அல்பேனி: அமெரிக்காவில் பல் மருத்துவப் படிப்பு படித்து வந்த இந்திய மாணவி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்தவர் ரந்தீர் கவ்ர்(37). அவர் அல்பேனி பகுதியில் வீடு எடுத்து தங்கி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்தார்.

அவர் கடந்த 8ம் தேதி மதியம் எல் சாப்ரண்ட் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். வீடு திரும்பிய அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை ரந்தீர் கல்லூரிக்கு வராததால் அவருடன் படிப்பவர்கள் அவரின் உறவினருக்கு போன் செய்து கேட்டனர். அவரது உறவினர் ரந்தீரின் வீட்டுக்கு சென்றபோது அவர் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரந்தீரின் வீட்டுப் பகுதியில் கடந்த 8ம் தேதி யாராவது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கொலையே நடக்காமல் இருந்த அல்பேனி பகுதியில் ரந்தீர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரந்தீரின் வீட்டுக் கதவை உடைத்து யாரும் நுழையவில்லை. அவரது உடைமைகள் அவரது வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications