Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசா போரில் இந்தியர் மரணம்! ஓடும் காரில் அரங்கேறிய கொடூர தாக்குதல்.. Ex இந்திய ராணுவ வீரர் என தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நடந்த தாக்குதல் ஒன்றில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஏழு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

Indian died in Gaza as Israel hamas war continue for more than seven months

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் ஓயாது என்பதை இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

எச்சரிக்கை: இதற்கிடையே அடுத்த கட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது. ரஃபாவில் அதிகளவில் பொதுமக்கள் வசிப்பதால் அங்குத் தாக்குதலை ஆரம்பித்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா தொடங்கி பல்வேறு உலக நாடுகளும் எச்சரித்துள்ளன. இருப்பினும், அதையும் தாண்டி இஸ்ரேல் ரஃபாவில் தாக்குதலை நடத்துவதில் உறுதியாக உள்ளது.

ஏற்கனவே ரஃபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள், இதற்கிடையே ஐநா சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் ஏற்பட்டதில் இருந்து அங்குச் சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்தியர் உயிரிழப்பு: அவர் ஐநா பாதுகாப்புத் துறையின் ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த அந்த நபரின் பெயர் உள்ளிட்ட இதர தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.. இருப்பினும் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த அக். மாதம் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடங்கிய நிலையில், கடந்த 7 மாதங்களில் முதல்முறையாகச் சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது பணியாளர் கொல்லப்பட்டதற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பணியாளர்கள் மீதான தாக்குதல்களையும் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தி உள்ளது. மனிதாபிமான உதவிகளைச் செல்ல செல்வோரின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உடனடியாக அங்குப் போர்நிறுத்தத்தைக் கொண்டு வந்து அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்ன நடந்தது: இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த கேள்விக்கு ஐநா தரப்பில், "இந்த விபத்து மிகச் சமீபத்தில் தான் நடந்தது என்பதால் எங்களிடம் அனைத்து தகவல்களும் இல்லை. இது தொடர்பாக விரைவில் விரிவான ரிப்போர்ட்டை வெளியிடுகிறோம். அந்த கார் கான்வாயில் சென்று கொண்டு இருக்கும் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்: இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்தே காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு காசாவில் தாக்குதல்கள் முடிந்துவிட்ட நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுமே ரஃபாவில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றே எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+