உளவு விவகாரம்.. இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாக். உத்தரவு
இஸ்லாமாபாத்: உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித்சிங்கை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் மெகமூத் அக்தர். இவர் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை உளவு பார்த்து வந்தது தெரிய வந்தது. ஏற்கனவே அவரை மத்திய உளவுத்துறை கண்காணித்து வந்ததையடுத்து, டெல்லி, சாணக்யாபுரி காவல் நிலையத்தில் புகாராக அளித்தது.

இதையடுத்து, போலீசார் அதிரடியாக மெகமூத் அக்தரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து இந்திய ராணுவ நிலைகள் அமைந்து இருக்கும் வரை படங்கள், இந்திய படைகளின் நடமாட்டம், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த தகவல்கள், உள்துறை அமைச்சர், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் உள்பட முக்கிய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. பிடிபட்ட அதிகாரி மெகமூத் அக்தர் வெளிநாட்டு துதரக அதிகாரிக்கான சிறப்புச் சலுகை பெற்றிருந்ததால் நீண்ட விசாரணைக்கு பின்னர் போலீஸ் அவரை விடுவித்தனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவர் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் உத்தரவிட்டது. இந்தநிலையில்தான், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித்சிங்கை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா! -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications