மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற இந்தியர் மாயம்: தேடல் நிறுத்தம்
கலிபோர்னியா: அமெரிக்காவில் வசிக்கும் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட இந்தியர் மாயமாகியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரசாத் மொபார்டி(55). அவரது மகள் துர்கா மொபார்டி(29) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வால்நட் குரோவ் பகுதியில் வசித்து வருகிறார்.
துர்காவுக்கும் ராஜேஷ் கட்டா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்தில் கலந்து கொள்ள பிரசாத் கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். கடந்த சனிக்கிழமை வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிராண்ட் ஐலேண்ட் மேன்ஷனில் திருமணம் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு அங்கிருந்து நடந்த வெளியே சென்ற பிரசாத் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதி முழுவதிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரை தேடுவதை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து துர்கா கூறுகையில்,
என் தந்தையை தேடுவது தான் என் முதல் வேலை. அவருக்கு இந்த பகுதியில் எந்த இடமும் தெரியாது. அவர் உயிருடன் திரும்பி வருவார் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications