51 வயது தாத்தா செய்யுற வேலையா இது? இந்தியரை நாடு கடத்த.. கனடா நீதிமன்றம் உத்தரவு!
ஒட்டவா: தனது பேர குழந்தையை பார்ப்பதற்காக தற்காலிக விசாவில் கனடாவுக்கு சென்ன 51 வயது இந்தியர் ஒருவர், மோசமான குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இதனையடுத்து அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும், மீண்டும் அவர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றுதான் கனடா. 18.58 லட்சம் இந்தியர்கள் கனடாவில் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 5.1% ஆகும். தொடர்ந்து கனடாவுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சில அமைப்புகள் இந்தியர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளன.

இப்படி இருக்கையில் இந்த எதிர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்தியர் ஒருவரின் நடத்தை அமைத்துவிட்டது. ஜகஜீத் சிங்(51) எனும் நபர் தனது பேரக்குழந்தையை பார்ப்பதற்காக 6 மாத தற்காலிக விசா மூலம் கனடாவுக்கு சென்றிருக்கிறார். நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்த பின்னர் சில நாட்கள் தங்கியிருந்தார். டிச.31ம் அவருடைய விசா முடிவடைகிறது. எனவே டிச.30ம் தேதி இந்தியா திரும்புவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்.
இப்படி இருக்கையில், ஒரு நாள் உயர்நிலைப் பள்ளியின் புகைபிடிக்கும் பகுதிக்கு சென்ற ஜகஜீத், அங்குள்ள இளம் மாணவிகளிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்றிருக்கிறார். ஆங்கிலம் தெரியாத நிலையிலும் அவர்களுடன் பேச முயன்று சில புகைப்படங்களையும் எடுக்க அனுமதி கோரியுள்ளார். மாணவிகளும் வெறும் புகைப்படம்தானே என்று நினைத்து அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள். புகைப்படம் எடுத்த ஜகஜீத், சும்மா இருக்காமல் அவர்களிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி மாணவியின் மீது கை போட்டு இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். புகாரையடுத்து கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டா லின் லெஸ்சிசிஸ்கி, உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், நீங்கள் அங்கே இருந்திருக்கிறீர்கள். மாணவிகளிடம் தவறாக நடந்து இருக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி சிறிய தண்டனை கொடுத்திருக்கிறார்.
பிரச்சனை இது உடன் முடியவில்லை. ஓரின நாட்கள் சிறை தண்டனைக்கு பிறகு, பிணையில் வெளியே வந்த அவர், மற்றொரு புகாரில் சிக்கினார். இதனை எடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
விசாரணையில் சிங்கை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்றும், கனடாவுக்குள் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிகள், தாங்கள் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இவர் புதியதாக கனடாவுக்கு வந்திருந்தாலும் எங்களிடம் நடந்து கொண்ட விதம், வயதில் மூத்தவர்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் பார்வையை பாதித்திருக்கிறது என்று தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே இந்தியர்களுக்கு எதிராக கனடாவில் பல அமைப்புகள் பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், தற்போது இந்தியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications