கோலாலம்பூர் வரலாற்றிலேயே முதல் முறையாக.. போலீஸ் கமிஷனரான சீக்கியர்!
கோலாலம்பூர்: இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஒருவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாட்டில் ஒரு சீக்கியர் போலீஸ் கமிஷனர் ஆகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரின் போலீஸ் கமிஷனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் அமர் சிங்(58) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாட்டில் ஒரு சீக்கியர் போலீஸ் கமிஷனராகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

நகர காவல் தலைமையகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய அமர் கூறுகையில்,
நான் கோலாலம்பூர் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளது மலேசியாவில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு கிடைத்த கவுரவம். மலேசிய காவல் துறையில் 0.16 சதவீத சீக்கியர்கள் உள்ள நிலையில் நான் கமிஷனராகியுள்ளது பெருமையாக உள்ளது.
இனம், நிறத்தின் அடிப்படையில் யாரையும் பிரித்துப் பார்க்கும் பழக்கம் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.
பல ஆண்டுகளாக கோலாலம்பூரின் துணை போலீஸ் தலைவராக இருந்த அமர் சிங்கின் தந்தையும், தாத்தாவும் கூட போலீஸ்காரர்கள் தான்.
அமரின் தந்தை இஷார் சிங் 1938ம் ஆண்டு மலேசியா சென்றார். 1939ம் ஆண்டு மலாய் மாநில காவல் துறையில் சேர்ந்தார். மலேசியா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்த அமர், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.யும் படித்துள்ளார். மேலும் ஷரியா சட்டத்தில் டிப்ளமோ பெற்றுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications