கனடாவில் பெண் பயணியை டாக்சியில் பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி உபேர் டிரைவர்
டொரண்டோ: கனடாவில் 25 வயது பெண்ணை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உபேர் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கனடாவில் உபேர் டாக்சி டிரைவராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அம்ரித்பால். டந்த செவ்வாய்க்கிழமை இரவு 25 வயது பெண் ஒருவர் அம்ரித்பாலின் டாக்சியில் ஏறியுள்ளார். டொரண்டோவில் உள்ள யங் சாலையில் இருந்து லாரன்ஸ் அவினியூவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லுமாறு அவர் அம்ரித்பாலிடம் தெரிவித்துள்ளார்.

இரவு 1 மணி அளவில் அம்ரித்பால் டாக்சியில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ரித்பாலை தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து உபேர் செய்தித் தொடர்பாளர் சேவியர் வான் சாவ் கூறுகையில்,
இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் அம்ரித்பாலை பணிநீக்கம் செய்து விட்டோம். இந்த வழக்கு விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications