ச்ச்சீ, இந்த கருமம் புடிச்ச செய்திக்கு என்ன தலைப்பு போடுவது என தெரியவில்லை!!!
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப்படும் முதியவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள டெவோன் பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டினா சேத்தி(25). அவர் தனது பொறுப்பில் இருந்த ஞாபக மறதி நோயாளிகளான 2 மூதாட்டிகள் மற்றும் ஒரு தாத்தாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதில் ஒரு மூதாட்டியின் வயது 101, மற்றொருவரின் வயது 80. கிறிஸ்டினாவால் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறந்துவிட்டார்.

கிறிஸ்டினா 80 வயது பாட்டியின் உடலில் இயற்கைக்கு புறம்பான வழியில் வைப்ரேட்டரை வைத்து ரசித்துள்ளார். தனக்கு ஏதோ நடக்கிறது ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அந்த மூதாட்டி தவித்துள்ளார்.
101 வயது பாட்டி என்றும் கூட பார்க்காமல் அவரது பிறப்புறுப்பு, மார்பகங்களை தொட்டு சுகம் அடைந்துள்ளார் கிறிஸ்டினா. கண் தெரியாமல் மறதி நோயால் அவதிப்படும் தாத்தாவின் ஆணுறுப்பை தொட்டும் சுகம் அடைந்துள்ளார் கிறிஸ்டினா. இந்த கொடூரச் செயல்களை அவர் வீடியோ எடுத்து தனது காதலருக்கு வேறு அனுப்பி வைத்துள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை அந்த முதியவர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்டினாவின் கம்ப்யூட்டரை வாங்கிய ஒருவர் அதில் இருந்த கிறிஸ்டினாவின் காம லீலைகளை பார்த்துவிட்டு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிறிஸ்டினாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications