ஆப்கானிஸ்தானில் இந்திய பெண்மணி துப்பாக்கி முனையில் கடத்தல்.. எச்சரிக்கைக்கு நடுவே சம்பவம்
Subscribe to Oneindia Tamil
காபூல்: கொல்கத்தாவை சேர்ந்த பெண்மணி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
40 வயதாகும் ஜூடித் டிசோசா, அகா கான் பவுண்டேசனில் சீனியர் டெக்னிகல் அட்வைசர் பணியில் இருப்பவர். காபூலின் தாய்மனி ஏரியாவில் இந்த கடத்தல் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. இதுவரை கடத்தல் தொடர்பாக எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கனில் இந்தியர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களும், அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களும் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை பிறப்பித்திருந்த நிலையில், இந்த கடத்தல் நடந்துள்ளது.
கடத்தப்பட்ட பெண்மணியை தேடும் பணியில் அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications