அமீரகம் வரும் மோடி.. தடபுடலாக வரவேற்கத் தயாரும் இந்தியர்கள்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு தர அங்கு வசித்து வரும் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் வரும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான் என்பதால் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய சமுதாய நல கம்யூனிட்டி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்காக ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக மேற்கொள்ள இது உதவும். நிகழ்ச்சிக்கு வருவோர் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து வசதியும் செய்யப்படவுள்ளது.
மேலும் இதற்காக பேஸ்புக்கில் ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் அமீரகத்தில் பிரதமர் மோடி விஜயம் செய்கிறார். கடைசியாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1981ம் ஆண்டு துபாய் வந்திருந்தார். அதன் பின்னர் இந்தியப் பிரதமர்கள் யாரும் இங்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமீரக பயணத்தின்போது, பிரதமர் மோடி, முதலில் அபுதாபி போகிறார். பின்னர் துபாய் செல்கிறார்.












Click it and Unblock the Notifications