இந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 840 ஆக உயர்வு.. மக்கள் வெளியேற்றம்!
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர்.
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுனாமி ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிறைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

பெரிய்ய நிலநடுக்கம்
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது.
[குறட்டை சத்தம் தாங்க முடியல.. கோர்ட் வரை சென்ற வீட்டின் ஓனர்! ]

சுனாமி எச்சரிக்காகி
இதனால் சுலசேசி தீவிற்கு முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை மாலையே இந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சில நிமிடத்தில் அங்கு சுனாமி ஏற்பட்டது. சுலசேசி தீவை சுனாமி தாக்கியது.

மோசமான பாதிப்பது
இந்திய நேரப்படி சரியாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.10 மணிக்கு அங்கு சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. சுலசேசி தீவில் பலு என்ற நகரத்தைதான் இந்த சுனாமி மோசமாக தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் கூடுதல் உயரத்தில் வந்து ஊருக்குள் நீர் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் கட்டிடங்கள் வேகமாக வந்த கடல் நீரில் மூழ்கி உள்ளது.

பலி எண்ணிக்கை
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 520 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications