ஈராக் தாக்குதலில் எத்தனை அமெரிக்க வீரர்கள் பலியானார்கள்.. தொடரும் மர்மம்.. எதை மறைகிறார் டிரம்ப்?
அமெரிக்கா ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80பேர் பலியானதாக ஈரான் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: அமெரிக்கா ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 பேர் பலியானதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க அரசோ, அதிபர் டிரம்போ இதை பற்றி இன்னும் எதுவும் உறுதியாக தெரிவிக்கவில்லை.
இன்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மொத்தம் 12 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. மொத்தம் இரண்டு ராணுவ தளங்கள் இப்படி தாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இர்பில், அல் அசாத் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. இரண்டுமே அமெரிக்காவின் படை வீரர்கள் அதிகம் இருக்கும் ஈராக் பகுதி ஆகும்.

அந்த கேள்வி
இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது மட்டும் இன்னும் மர்மமாக இருக்கிறது. அமெரிக்க அரசு இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எத்தனை பேர் பலியானார்கள் என்பது கணக்கெடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஈரான்
ஆனால் ஈரான் தரப்பு முதற்கட்ட ஆய்வின்படி அங்கு 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் வெளியிட்டுள்ளது. 80 வீரர்களின் உடல்களை ஈராக் படைகள் கைப்பற்றி உள்ளது. ஈராக் படை இது தொடர்பான தகவலை எங்களிடம் தெரிவித்தது என்று ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவை இந்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மறைப்பு
இந்த தாக்குதலில் நிறைய சேதங்கள் நடந்து இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களை அமெரிக்கா வெளியே சொல்லாமல் மறைக்கிறது. ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்திவிட்டுதான் அமெரிக்கா உண்மையை சொல்லும். அது வரை அமெரிக்கா வாய் திறக்காது என்கிறார்கள்.

என்ன அதிகம்
80 வீரர்கள் பலியானது உறுதியெனில், சமீப நாட்களில், அமெரிக்க வீரர்கள் அதிகமாக பலியானது இந்த தாக்குதலாகத்தான் இருக்கும். 80 பேர் பலியானது உறுதியானால் கண்டிப்பாக அமெரிக்கா மிகப்பெரிய பதில் தாக்குதலை நிகழ்த்தும். அது இன்னொரு போரை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications