இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்
நியூயார்க்: மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய தாக்குதலுக்கு மூன்று வாரங்கள் கடந்துள்ளன. இந்த காலகட்டத்தில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களால் அமெரிக்காவின் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.29 ஆயிரம் கோடிக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் அமெரிக்காவில் வெளியாகும் முக்கிய நாளிதழ்களில் ஒன்றான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் இந்த போரால் ஏற்படவுள்ள விளைவுகள் குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா போர்
போர் தொடங்கிய முதல் மூன்று வாரங்களிலேயே அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பகால கணக்கீட்டின்படி 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை அமெரிக்க பாதுகாப்புத்துறை பட்ஜெட் தொடர்பான முன்னாள் அதிகாரி எலைன் மெக்கஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நடத்திய தாக்குதல்களில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
F35 போர் விமானம்
குறிப்பாக எஃப்-35 வகை போர் விமானம் ஒன்று கடுமையாக சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தவறுதலாக நடைபெற்ற தாக்குதலில் மூன்று எஃப்-15இ வகை போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஈராக் வான்வெளியில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக் கொண்டதில் ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அமெரிக்க ராணுவத்திற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி?
- என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!
- சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கும் ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல்
- கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்?
- நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!
MQ9 ரீப்பர் டிரோன்
சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில், ஐந்து கேசி-135 வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானங்கள் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஈரான் தாக்குதல்களில் அமெரிக்காவின் பல அதிநவீன ஆளில்லா உளவு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக எம்.கியூ-9 ரீப்பர் வகையை சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு இழப்பு
இந்த டிரோன்கள் அமெரிக்காவின் முக்கிய உளவு சாதனங்களாக கருதப்படுவதால், அவை சேதமடைந்தது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் நிறுவப்பட்டிருந்த ரேடார் அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த ரேடார் அமைப்புகள் எதிரி தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் முக்கிய சாதனம் இருப்பதால், அவற்றின் சேதம் பெரும் இழப்பாக இருக்கும் என்கின்றனர்.
யுஎஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு
இதற்கிடையில் கிரீஸ் நாட்டின் சூடா விரிகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான 'யுஎஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு' கப்பலிலும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமும் அமெரிக்க ராணுவத்திற்கு கூடுதல் இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
-
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி











Click it and Unblock the Notifications