இஸ்ரேலுடன் முழு போருக்கு தயார்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஈரான்! 3ம் உலகப்போர் வந்துவிட்டது!
தெஹ்ரான்: கடந்த ஆண்டு ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகளை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் உடன் முழு போருக்கு தயார் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
எனவே இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், இதன் மூலம் 3ம் உலகப்போர் தொடங்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.

ஈரான் சொன்னது என்ன?
ஈரான் நாட்டின் உச்ச தலைவரான காமேனியின் மூத்த ஆலோசகரான யாஹ்யா ரஹீம், "நாங்கள் இஸ்ரேலுடன் சண்டை செய்ய ரெடியாகி வருகிறோம். இது சிறிய மோதலாக இல்லாமல், முழு போராக இருக்கும். மற்றவர்களிடம் இல்லாத ஆயுதம் எங்களிடம் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி, முகமது பாக்பூர் இது குறித்து கூறுகையில், ஈரான் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள ரெடியாக இருக்கிறது. நாங்கள் முழுமையனா போருக்கு தயாராக இருக்கிறோம்" என கூறியிருக்கிறார்.
புது ஆயுதம்
இதற்கிடையில் ஈரான் புது வகையான அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வருகிறது. குறிப்பாக ஓரிரு நாட்களுக்கு முன்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்காவின் அல் தஃப்ரா விமான நிலையத்தின் மாதிரியை உருவாக்கி, அதன் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதற்காக கெய்ப்பர் மற்றும் ஃபத்தாஹ் போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தியிருக்கிறது. இந்த வகை ஏவுகணைகள் நிலத்திற்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள்
இந்த வகை ஏவுகணைகள் ஹைப்பர் சோனிக் ரகத்தை சேர்ந்தது. அதாவது இது, ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லும். எனவே இதனை இடைமறித்து தாக்குவது எல்லாம் நடக்காத காரியம். இந்த சூழலில் ஈரானின் எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. மறுபுறம் அமெரிக்கா ஈரான் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது.
குறுக்கே வந்த டிரம்ப்
"ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தும் ஏவுகணைகளை ஈரான் உருவாக்குகிறது. அணு ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்க கூடாது என்று வார்னிங் கொடுக்கப்பட்ட பின்னரும், ஈரான் அணு ஆயுத முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு ஈரான் கடுமையாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. டிரம்பின் கருத்துகள் தவறானவை, மக்களைத் திசைதிருப்பும் நோக்குடையவை என ஈரான் மறுத்திருக்கிறது.
டிரம்பின் குற்றச்சாட்டும், இஸ்ரேல் மீதான ஈரானின் போர் அறிவிப்பும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதியையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!












Click it and Unblock the Notifications