3ம் உலக போர் தொடங்கிடுச்சா? "நிலைமை மோசம்.." ஈரான் மீது இஸ்ரேல் மிக பெரிய தாக்குதல்! அடுத்து என்ன
டெல் அவிவ்: ஈரான் மீது முதல்முறையாக இஸ்ரேல் பெரியளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இது அங்கு நிலவிய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரம் ஈரான் இந்த விவகாரத்தில் உடனடியாக பதிலடி கொடுத்தால் அது பிராந்திய போரை ஏற்படுத்தலாம். எனவே, ஈரான் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது நிலைமை மோசமாகியுள்ளது. கடந்த அக். 1ம் தேதி ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.

திட்டம்: இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நிச்சயம் பதிலடி தரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் தாக்குதல் நடத்தாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று திடீரென ஈரான் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. குறிப்பிட்ட பகுதி என்று இல்லாமல் ஈரான் முழுக்க உள்ள ராணுவ தளங்கள் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா தொடக்கம் முதலே இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் காரணமாகவே ராணுவ தளங்களை மட்டுமே இஸ்ரேல் டார்கெட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் ராணுவப் படைத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள், ஆயுத உற்பத்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இப்போது முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் கூட இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இஸ்ரேல் அதுபோல எதுவும் செய்யவில்லை. ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளது.
யாரும் எதிர்பார்க்கல: அதேநேரம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நேரத்தில் இஸ்ரேலிடம் இருந்து இப்படியொரு தாக்குதலை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டதால் பாதிப்பு பெரியளவில் இல்லை என்றும் ஈரான் கூறி தனது இமேஜை பாதுகாக்க முயல்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் இஸ்ரேல் மீது போர் தொடுக்க ஈரான் ராணுவம் தயாராக வேண்டும் என்று ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி அறிவுறுத்தியுள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைப் பொறுத்து பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல்களில் எப்போதும் ஈரான் உடனடியாக பதிலடி கொடுக்கும். ஆனால், இந்த முறை அப்படி முடிவெடுக்க வாய்ப்புகள் குறைவு.
ஈரான்: ஈரானை பொறுத்தவரை இது இப்போது மிகவும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.. ஏனென்றால் ஈரான்- ஈராக் போருக்குப் பிறகு, அங்கு இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டதே இல்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவம் அதிகளவில் இருக்கிறது. இதனால் ஈரானின் தலைவர்கள் இப்போது ஒரு பிராந்தியப் போருக்கு ரெடியாக இல்லை. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அது பிராந்திய போராக மாறும் என்பது ஈரானுக்கும் தெரியும் என்பதால் இந்த விவகாரத்தில் யோசித்தே முடிவெடுக்கும்.
தற்போதுள்ள சூழலை வைத்து பார்க்கும் போது இஸ்ரேல் ஈரான் போர் என்பது நெருங்கிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.. இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் இருந்தாலும் கூட, இதுவரை ஈரான் மீது இஸ்ரேல் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியதே இல்லை. மறுபுறம், இதை அப்படியே விட்டுவிட்டாலும் அது ஈரானைப் பலவீனமாகக் காட்டிவிடும். எனவே, ஈரான் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதேநேரம் ஈரான் தாக்குதலை நடத்தினால் அடுத்துடுத்து பல உலக நாடுகள் உள்ளே வரலாம். இது 3ம் உலக போரையே ஆரம்பித்து வைக்கும்.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை











Click it and Unblock the Notifications