ஈரானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,036- மலேசியாவில் 46 பேர் பலி!
டெஹ்ரான்: ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,036 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கொரோனாவால் இதுவரை 47, 503 பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனாவில் உயிரிழப்பு ஏற்பட்ட சீனாவை விட இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரையில் இத்தாலியில்தான் அதிகபட்சமாக 13,155 பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவில் 5,110 பேரும் ஸ்பெயினில் 9,387 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸில் 3,036 பேரும் இங்கிலாந்தில் 2,352 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர். ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் படு உக்கிரமாக உள்ளது.

ஈரானில் 3,036 பேர் பலி
கொரோனாவால் ஈரானில் மொத்தம் 47,593 பேர் பாதிக்கபட்டனர். இவர்களில் 15,473 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 3,036 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3871 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.

மலேசியாவில் 46 பேர் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் அதிகபட்சமாக 56 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்ததாக மலேசியாவில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் 27 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

சிங்கப்பூர், இலங்கை நிலவரம்
சிங்கப்பூரில் இதுவரை 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் 3 பேர் பலியாகி உள்ளனர். மாலத்தீவில் கொரோனா மரணங்கள் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. மியான்மரில் இதுவரை ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வங்கதேசத்தில் 6 பேரும் நேபாளில் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் 157 பேர் பலி
இந்தோனேசியாவில் கொரோனாவால் 157 பேர் பலியாகி இருக்கின்றனர். இங்கு 1,677 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தாய்லாந்து நாட்டில் 1,771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இங்கு 12 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸில் 2311 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்நாட்டில் 96 பேர் மரணித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை 23 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications