ஈரான் - அமெரிக்கா இடையே "அணுசக்தி பேச்சுவார்த்தை" ஜெனீவாவில் தொடக்கம்!
ஜெனீவா: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி தயாரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுவிஸின் ஜெனீவாவில் நேற்று தொடங்கியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனுடன் அணுசக்தி தயாரிப்பு தொடர்பாக ஈரான் பல சுற்றுப் பேச்சுகளை ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடத்தி வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தைகளை அடுத்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வரை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இடைக்காலமாக அணுசக்தி தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை நவம்பர் 24-ந் தேதிக்குள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் திட்டமிட்ட அடிப்படையில் நவம்பர் மாதம் இடைக்கால ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து புதிய பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நேற்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் இப்பேச்சுவார்த்தை நடைபெறும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் அமெரிக்காவின் துணை வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழு பங்கேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications