பாரீஸ் தாக்குதல்களின் முக்கிய மூளையாக இருந்தவருக்கு நெருக்கமான ஐஎஸ் தலைவர் பலி

Subscribe to Oneindia Tamil

ராக்கா: பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்தவருடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். பாரீஸ் போலீசார் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

IS leader linked to Paris attacks `mastermind` killed in Syria

இந்நிலையில் பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த அப்துல் ஹமீது அபௌதுக்கு நெருக்கமான ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சராப் எல் முவாதான் கடந்த 24ம் தேதி சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் முவாதான் உள்பட 10 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

முவாதானுக்கும் பாரீஸ் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பிரான்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முவாதான் படாகிளான் தியேட்டரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான சாமி அமிமூருக்கு நெருக்கமானவர் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

26 வயதான முவாதான் பாரீஸின் புறநகர் பகுதியில் வளர்ந்தவர். மொராக்கோவைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த முவாதானுக்கு 7 சகோதர, சகோதரிகள் உள்ளனர்.

முவாதான் கடந்த 2012ம் ஆண்டு ஏமன் அல்லது ஆப்கானிஸ்தான் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு அவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார். இன்டர்நெட் மூலம் தான் அவர் ஐஎஸ்ஐஎஸ் பக்கம் ஈர்க்கப்பட்டு சிரியா சென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+