ஈராக்கில் டிவி சேனல் துவங்கிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
மொசுல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனலை துவங்கியுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இணையதளத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு உலகை அதிர்ச்சி அடைய வைப்பார்கள். இந்நிலையில் தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனலை துவங்கியுள்ளனர்.

சேனலை துவங்கிய கையோடு டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். டிவி நிகழ்ச்சி என்றால் அவர்களைப் பற்றியது தான். மொசுல் நகரில் சுமார் 50 ஆயிரம் பேர் இந்த தொலைக்காட்சி சேனலை பார்க்கிறார்கள்.
தீவிரவாதிகள் டிவி சேனல் துவங்கியதை சிரியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று தான் கண்டுபிடித்து செய்தி வெளியிட்டது. தீவிரவாதிகள் துவங்கியுள்ள சேனலுக்கு பிஇஐஎன் ஹெச்டி4 என்று பெயர் வைத்துள்ளனர்.
அரசின் எகிப்திய ரேடியோ மற்றும் தொலைக்காட்சி யூனியனின் மிகப்பெரிய பங்குதாரரான எகிப்தைச் சேர்ந்த சாட்டிலைட் நிறுவனமான நைல்சாட் மூலம் தான் தீவிரவாதிகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications