ஈராக்கில் ஓங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கை! ரமாதி நகரும் வீழ்ந்தது!!

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்கில் அரச படைகள் வசம் இருந்த ரமாதி நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ரமாதிநகரில் ஈராக் அரசு கட்டிடங்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கில் பெரும்பான்மையான பகுதியினை தங்களதுவசம் கொண்டு வந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். அத்துடன் இஸ்லாமிய தேசத்தின் தலைவராக அதாவது கலிபாவாக அல் பக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றாதோருக்கும் பிற மதத்தினருக்கும் காட்டுமிராண்டித்தனமான கொடூர தண்டனைகளை விதித்து வருகிறது ஐ.எஸ். இயக்கம். இந்த அமைப்புக்கு எதிரான யுத்தத்துக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் ஈராக்கில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ரமாதிநகரை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரமாதிநகரின் முக்கிய அரசு கட்டிட்டங்களை தீவிரவாதிகள் பிடித்துஉள்ளனர்.

ஈராக்கின் மிகப்பெரிய மாகாணத்தின் ரமாதிநகர் வீழ்ந்திருப்பது ஈராக்கிய அரசு படைக்கு மிகவும் இழப்பு என்றே கருதப்படுகிறது. அத்துடன் நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறைபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதியுடன் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன், அதிகமான ஆயுத உதவிகளை வழங்க உறுதி அளித்து உள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. ஈராக்கில் முக்கிய மாகாணத்தை தம் வசம் கொண்டு வந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதம் அங்கு அரசு கட்டிடங்களில் அவர்களது கொடியை பறக்கவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+