செக்ஸ் வைக்க மறுத்த 17 வயது சிறுமியின் தொடையில் வெந்நீரை ஊற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: உடலுறவு கொள்ள மறுத்த 17 வயது சிறுமியின் தொடையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெந்நீரை ஊற்றிய கொடுமை நடந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பொதுமக்களை தலையை துண்டித்து கொன்று வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன், சந்தையில் செக்ஸ் அடிமைகளாக விற்று விடுகின்றனர்.
இது குறித்து தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிவந்துள்ள 17 வயது யசிதி சிறுமி கூறுகையில்,

பலாத்காரம்
நானும், என் தங்கையும் தீவிரவாதிகளின் பிடியில் 9 மாதங்கள் நரக வேதனை அனுபவித்தோம். அவர்கள் தினமும் என்னையும், என் தங்கையையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் எங்களை ஏலத்தில் விட்டுவிட்டனர்.

வெந்நீர்
என்னை பல தீவிரவாதிகள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அது மட்டுமின்றி அவர்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யாத போது எல்லாம் என் தொடையில் வெந்நீரை ஊற்றினர். நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன். கருவை கலைப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

கொடுமை
குர்ஆனில் இருந்து சூராக்களை ஒப்பிக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு ஒப்பிக்கையில் என்னை வாங்கிய அல் ருஸியா என்பவரும், அவரது பாதுகாவலர்களும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள். மொசுல் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், சிறுமிகளுடன் என்னை கைவிலங்கு போட்டு அடைத்து வைத்திருந்தனர்.

கன்னிகள்
கன்னித்தன்மையுடன் இருப்பவர்களை 40 ஆண்களுடன் ஒரு அறைக்குள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தங்களுக்கு எந்த கன்னி வேண்டுமோ அவரை பார்த்து கைகாட்டுவார்கள்.

பாவி
அல் ருஸியா தினமும் காலை பெண்கள் மற்றும் சிறுமிகளை நிர்வாணமாக்கி வரிசையாக நிற்க வைப்பார். அவர்களை முகர்ந்து பார்த்து அதில் யாருடன் அன்று உடலுறவு கொள்வது என்பதை முடிவு செய்வார். அவர் ஒருவரை தேர்வு செய்த பிறகு மீதமுள்ளவர்களுடன் அவரது பாதுகாவலர்கள் உறவு கொள்வார்கள்.

உணர்ச்சியே இல்லை
தீவிரவாதிகள் என்ன செய்ய சொன்னாலும் செய்ய வேண்டும். இல்லை எனில் அடித்து துன்புறுத்துவார்கள். அவர்களிடம் அடி வாங்கி வாங்கி மறத்துப் போய்விட்டது. தற்கொலை செய்து கொள்ளலாம் போன்று இருந்தது என்றார் அந்த சிறுமி.

விடுதலை
கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சார் அருகே பெஷ்மெர்கா படையினர் நடத்திய தாக்குதலில் அல் ருஸியா மற்றும் அவரது பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அவரது பிடியில் இருந்த பெண்கள், சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications