Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தமில்லாமல் இஸ்ரேல் செய்த பெரிய சம்பவம்! ஒரே தாக்குதலில் ஹவுதி பிரதமர் & பல அமைச்சர்கள் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சனா: மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்து வரும் சூழலில் ஹவுதி மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் நடத்திய தீவிரத் தாக்குதலில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி வரும் ஹவுதி பிரதமர் அஹமது அல் ரஹாவி கொல்லப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு ஹவுதி அமைச்சர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மத்தியக் கிழக்கில் தொடர்ச்சியாக மோதல்கள் நடந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் தொடங்கியது. பிறகு ஹிஸ்புல்லா, ஹவுதி எனப் பல்வேறு அமைப்புகளும் உள்ளே வரப் போர் விரிவடைந்தது. இந்த மோதல்களால் அந்தப் பகுதிகளில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Israel Airstrike Kills Houthi Prime Minister Ahmed al-Rahawi in Yemen s Sanaa Rebels Confirm

ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டார்

இதற்கிடையே ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பிரதமராகச் செயல்பட்டு வந்த அஹமது அல்-ரஹாவி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி குழு உறுதி செய்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலில் அல்-ரஹாவி மட்டுமின்றி, பல அமைச்சர்களும் கொல்லப்பட்டனர்.

ஏமன் நாட்டில் பெயரளவில் ஒரு அரசு இருந்தாலும் கூட அங்குப் பெரும்பகுதியை இந்த ஹவுதி படைகளே கட்டுப்படுத்துகிறது. தலைநகர் சனா உட்பட பல பகுதிகள் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இப்போது சனாவின் பிரதமர் கொல்லப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது?

அரசு செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சனாவில் கடந்த வியாழக்கிழமை கருத்தரங்கு நடந்துள்ளது. அந்தக் கருத்தரங்கில் பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தத் தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட இஸ்ரேல், சரியாக அந்தக் கருத்தரங்கு நடக்கும் இடத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் அதில் பங்கேற்ற பலரும் உயிரிழந்ததாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது.

அல்-ரஹாவி கடந்த 2024 ஆகஸ்டு மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசின் பிரதமராக இருந்து வந்தார். அவரை காலி செய்யும் வகையிலேயே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. சனாவில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் ராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது..

ஹவுதி அமைப்பு

காசா போரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைப்புகளில் முக்கியமானது ஹவுதிக்கள் ஆகும். காசா போரைக் கண்டித்துக் கடந்த சில மாதங்களாக இஸ்ரேலை நோக்கிப் பல ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுடன் தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அப்போது ஹவுதிக்கள் தெரிவித்திருந்தனர். ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தினாலும் அதில் பெரும்பாலானவை இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டன இருப்பினும், ஹவுதி குழு தனது தாக்குதல்களைத் தொடர்ந்தன.

இஸ்ரேல் பதிலடி

அதற்குப் பதிலடியாகவே ஹவுதிக்கள் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், சனாவின் பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மறுபுறம் இந்தப் பதற்றம் செங்கடலிலும் பரவியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து ஹவுதிக்கள் தாக்கி வருகிறது.. இதற்குப் பதிலடியாக, ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா மற்றும் ஹோடெய்டா துறைமுகம் உட்படப் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்கியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+