வளைகுடாவில் நிறம் மாறும் பூக்கள்.. இஸ்ரேலுக்கு கிரீன் சிக்னல்.. அமெரிக்கா ஹேப்பி அண்ணாச்சி
ஜெருசேலம்: தங்கள் நாட்டுடனான உறவை இயல்பாக்குவதற்கு சவுதி அரேபியா, வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தயாராக இருக்கின்றன என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஜெருசேலம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொள்வதால் இரு நாட்டிலும் பொருளாதார பிரச்னைகள் மேலெழுந்துள்ளன. இதை முக்கியமாக காரணமாக முன்னிறுத்தி அடிக்கடி இஸ்ரேலின் போக்கை சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் விமர்சித்து வருகின்றன. அவ்வளவு ஏன் கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை.

சவுதி மட்டுமல்லாது இதுவரை அல்ஜீரியா, கொமரோஸ், ஜிபூட்டி, ஈராக், குவைத், லெபனான், லிபியா, மொரிட்டானியா, ஓமன், கத்தார், சோமாலியா, சிரியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகிய அரபு லீக்கின் 15 உறுப்பு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. அதேபோல ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், புருனே, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, மாலத்தீவுகள், மாலி, நைஜர் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலின் யூத அரசை அங்கீகரிக்கவில்லை. இந்த நாடுகளுடன், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இன்னும் அந்த நாட்டை அங்கீகரிக்கவில்லை.
எனவே இந்த பிரச்னையை சரி செய்து உலக நாடுகளுடன், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுடன் நட்புறவை வளர்க்க இஸ்ரேல் தொடர்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன், "ஏழு இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கும், அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கும் தயாராக இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆபிரகாம் உடன்படிக்கையில் நான்கு நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்லாமிய-கிறிஸ்தவ-யூத மதங்களை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைப்பதுதான் இந்த ஆபிரகாம் உடன்படிக்கையின் நோக்கமாகும். அதேபோல இந்த நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதையும் இது நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்த உடன்படிக்கை எட்ட அமெரிக்கா முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவின் வர்த்தக சந்தையை அமெரிக்கா கைப்பற்ற தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இஸ்ரேலுடன் மற்ற நாடுகள் சேராமல் இருப்பதால், இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. எனவே ஆபிரகாம் உடன்படிக்கையில் மற்ற நாடுகளை இணைப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது சவுதி அரேபியா, வங்கதேசம், சூடான், புருனே, சோமாலியா, மொராக்கோ, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications