Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளைகுடாவில் நிறம் மாறும் பூக்கள்.. இஸ்ரேலுக்கு கிரீன் சிக்னல்.. அமெரிக்கா ஹேப்பி அண்ணாச்சி

Subscribe to Oneindia Tamil

ஜெருசேலம்: தங்கள் நாட்டுடனான உறவை இயல்பாக்குவதற்கு சவுதி அரேபியா, வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தயாராக இருக்கின்றன என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஜெருசேலம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொள்வதால் இரு நாட்டிலும் பொருளாதார பிரச்னைகள் மேலெழுந்துள்ளன. இதை முக்கியமாக காரணமாக முன்னிறுத்தி அடிக்கடி இஸ்ரேலின் போக்கை சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் விமர்சித்து வருகின்றன. அவ்வளவு ஏன் கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை.

Israel has said that Islamic countries including Saudi Arabia will recognize them

சவுதி மட்டுமல்லாது இதுவரை அல்ஜீரியா, கொமரோஸ், ஜிபூட்டி, ஈராக், குவைத், லெபனான், லிபியா, மொரிட்டானியா, ஓமன், கத்தார், சோமாலியா, சிரியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகிய அரபு லீக்கின் 15 உறுப்பு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. அதேபோல ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், புருனே, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, மாலத்தீவுகள், மாலி, நைஜர் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலின் யூத அரசை அங்கீகரிக்கவில்லை. இந்த நாடுகளுடன், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இன்னும் அந்த நாட்டை அங்கீகரிக்கவில்லை.

எனவே இந்த பிரச்னையை சரி செய்து உலக நாடுகளுடன், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுடன் நட்புறவை வளர்க்க இஸ்ரேல் தொடர்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன், "ஏழு இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கும், அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கும் தயாராக இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ஆபிரகாம் உடன்படிக்கையில் நான்கு நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்லாமிய-கிறிஸ்தவ-யூத மதங்களை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைப்பதுதான் இந்த ஆபிரகாம் உடன்படிக்கையின் நோக்கமாகும். அதேபோல இந்த நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதையும் இது நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்த உடன்படிக்கை எட்ட அமெரிக்கா முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவின் வர்த்தக சந்தையை அமெரிக்கா கைப்பற்ற தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இஸ்ரேலுடன் மற்ற நாடுகள் சேராமல் இருப்பதால், இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. எனவே ஆபிரகாம் உடன்படிக்கையில் மற்ற நாடுகளை இணைப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது சவுதி அரேபியா, வங்கதேசம், சூடான், புருனே, சோமாலியா, மொராக்கோ, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+