லெபனானில் நடந்த பேஜர் அட்டாக்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்! மத்திய கிழக்கில் எகிறும் டென்ஷன்
ஜெருசலேம்: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர், வாக்கி டாக்கிகள் திடீரென வெடித்து சிதறின. இதற்கு பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டிய நிலையில், தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோதல் முற்றியது. இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என சூளுரைத்து போர் தொடுத்தது.

காசாவிற்குள் தரை வழியாக தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினரை கொன்று குவித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல முக்கிய நிர்வாகிகள் பலியாகியுள்ளனர்.
ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவு அளிக்கும் ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளி வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் ராணுவ தளங்களை குறித்து கடந்த மாதம் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருகின்றன.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் திடீரென வெடித்து சிதறின. இதில், ஹிஸ்புல்லா இயக்கத்தை சேர்ந்த 40 பேர் பல்யாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த பேஜர் தாக்குதலுக்கு பிண்ணனியில் இஸ்ரேல் இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது. தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்குள் புகுந்து இஸ்ரெல் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இதனால் பழிவாங்காமல் விட மாட்டோம் என ஹிஸ்புல்லா கூறியது.
ஹிஸ்புல்லா முன்வைத்த குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், தாக்குதல் நடத்தி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், பேஜர் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், பெஞ்சமின் நெதன்யாகு இதை முதல் முறையாக ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
லெபனான் மீதான நடவடிக்கைக்கு நான் தான் ஒப்புதல் கொடுத்தகாக பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார். இந்த வாரம் தான், ஐக்கிய நாடுகள் அவையின் தொழிலாளர் முகமையில், மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரமான போர் நடைபெற்று இருப்பதாக இந்த விவகாரம் தொடர்பாக லெபனான் புகாரளித்தது.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications