பிரிந்து சென்ற காதலி மீது திராவகம் வீசிய வக்கீலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
ரோம்: பிரிந்து சென்ற காதலியைப் பழி வாங்கும் விதமாக அவர் மீது ஆசிட் வீசிய வக்கீலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வக்கீல் லூகாவரானி(37) ஏற்கனவே மணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பன். ஆனபோதும், அதனை மறைத்து லேசியா அன்னிபாலி என்பவரை காதலித்து வந்துள்ளார் லூகாவரானி.
ஒருநாள் லூகாவரானியின் வேடம் கலைந்து விட, அவரை விட்டு பிரிந்து சென்றார் லேசியா. இதனால் ஆத்திரமடைந்த லூகாவரானி, லேசியாவைப் பழி வாக்கும் விதமாக கூலிப்படையை ஏற்பாடு செய்து அவர் மீது திராவகம் வீசி தாக்குதல் நடத்தினார். அதில் லூசியாவின் முகம் கருகிறது. கிட்டத்தட்ட ஏழு அறுவைச் சிகிச்சைகள் செய்து லேசியா காப்பாற்றப் பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கூலிபடையை சேர்ந்த 2 பேருக்கும் தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் வக்கீலுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications