‘நான் ஒரு வெடிகுண்டு’ டிசர்ட் அணிந்து பள்ளிக்குச் சென்ற 3வயது ’ஜிகாத்’ : தாய்க்குச் சிறை
பாரீஸ்: பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர்.
பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான வாசகங்கள் அமையப் பெற்ற டி சர்ட்களை அணிவது ஆண், பெண் என இரு பாலருக்குமே விருப்பமான ஒன்று தான்.

அந்தவகையில், பிரான்சு நாட்டில் தனது 3 வயது மகனுக்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என எழுதப்பட்ட டி சர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய காரணத்திற்காக அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் விநோதமாகத் தானே இருக்கிறது.
நான் ஒரு வெடிகுண்டு....
பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பவுச்ரா என்ற பெண்மணி தனது 3 வயது மகனான ஜிகாத்ஸ்க்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என்ற வார்த்தையும், செப்டம்பர் 11 என்ற தேதியும் எழுதப்பட்ட டிசர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.

செப்டம்பர் 11....
செப்டம்பர் 11 என்பது அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதல் நாள் என்பதாலும், டிசர்ட்டில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் இடம்பெற்றிருந்ததாலும் அச்சிறுவனின் டிசர்ட் அங்கு பரபரப்பைக் கிளப்பியது.
கைது....
டிசர்ட்டால் உண்டான சர்ச்சையைத் தொடர்ந்து அந்த மாணவனின் தாயார் மற்றும் மாமாவின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தீவிரவாத ஆடை....
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தீவிரவாத சம்பவங்களோடு தொடர்புடைய ஆடையை அணிவித்த குற்றத்திற்காக அச்சிறுவனின் தாயாருக்கு ஒரு மாத சிறையும், 2,000 யூரோ அபராதமும், அத்தோடு அச்சிறுவனின் மாமாவிற்கு 2 மாத சிறையும் 4,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப் பட்டது.
அழகான குண்டு....
இந்த விநோத வழக்கு குறித்து மாணவனின் தாயார் கூறுகையில், 'இந்த டிசர்ட்டியினை என்னுடைய அண்ணன் வாங்கி கொடுத்தார். மேலும் அதில் கூறப்பட்டுள்ள நான் ஒரு வெடிகுண்டு என்பதற்கு நான் அழகானவன் என்ற அர்த்தம் என்றும் அதோடு செப்டம்பர் 11 2009 என்பது என் மகனுடைய பிறந்த தேதி' எனத் தெரிவித்துள்ளார்.
சும்மா... கமெடி பண்ணினோம்....
மேலும் அவரது அண்ணன் இது குறித்து கூறுகையில், ‘நாங்கள் தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த டிசர்ட்டினை அணிந்துவிடவில்லை. அதில் உள்ளது ஒரு நகைச்சுவையான விசயமே ஆகும்' எனக் கூறியுள்ளார்.
கடுமையான விதிமுறை....
இது குறித்து இவர்களது வழக்கறிஞர் கூருகையில், ‘ இந்த விதிமுறையானது கடுமையானதாக உள்ளது என்றும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications