விண்வெளிக்கு அனுப்பப்பட்ட "விஸ்கியும், சுண்டெலிகளும்" - ஜப்பான் நிறுவனத்தின் வித்தியாச ஆராய்ச்சி
டோக்கியோ: ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று விண்வெளிக்கு ஆராய்ச்சிக்காக விஸ்கியினை அனுப்பி வைத்துள்ளது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள சன்டாரி விஸ்கி நிறுவனம் தனது தயாரிப்பை சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு அனுப்பி அங்கு புவியீர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் அதன் தன்மை மாறுவது குறித்த ஆய்வு நடத்த திட்டமிட்டது. அதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் அனுமதி கேட்டனர்.

நாசா அனுமதி அளித்ததை தொடர்ந்து அதை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கை தொடங்கியது. அதற்காக "எச் 2 பி" என்ற ஆளில்லா ராக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் 5.5 டன் அளவு விஸ்கி நிரப்பிய குடுவையும் ஏற்றப்பட்டது. அந்த ராக்கெட் கடந்த வாரம் 19 ஆம் தேதி தெற்கு ஜப்பானில் வைத்து விண்ணில் செலுத்தப்பட்டது.
தற்போது அந்த ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை சென்றடைந்தது. ஒரு வருடம் அது அங்கு வைக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு பூமிக்கு கொண்டு வரப்பட்டு அதன் தன்மையின் மாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த ராக்கெட்டில் விஸ்கியுடன் 12 சுண்டெலிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன அவை பல்வேறு பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications