வேட்பாளர் போட்டியில் பின்னடைவு.. ஜார்ஜ் புஷ் தம்பி விலகினார்.. நெவேடா மாகாணத்தை வென்றார் ஹில்லாரி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராவதற்கான போட்டியில் இருக்கும் ஹில்லாரி கிளிண்டன் நெவேடா மாகாணத்தில் வெற்றி பெற்றார்.
அங்கு அவருக்கு 52.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவரது போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸ் வெறும் 47.4 சதவீத வாக்குகளையே பெற்றார்.
மறுபக்கம் தெற்கு கரோலினாவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் எளிதாக வென்றார். அவர் வெல்லும் 2வது மாகாணம் இது. முதலில் அவர் நியூ ஹேம்ப்ஷயரை வென்றிருந்தார்.

அடுத்து அவர் நெவேடா மாகாண தேர்தலைச் சந்திக்கவுள்ளார். தொடர்ந்து அலபாமா, ஆர்கான்ஸஸ், ஜார்ஜியா, டெக்ஸாஸ் மாகாணங்களை எதிர்கொள்ள உள்ளஆர்.
முன்னதாக போட்டி கடுமையாக இருந்ததால் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக முயன்று வந்த ஜெப் புஷ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் சீனியரின் இளைய மகன் ஆவார். ஜெப் புஷ்ஷின் அண்ணன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர்தான், ஒபாமாவுக்கு முன்பு அதிபராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
புளோரிடா மாகாண ஆளுநராக இருந்து வந்தார் ஜெப். டிரம்ப்பின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் தொடக்க சுற்றிலேயே அவர் வெளியேறி விட்டார்.












Click it and Unblock the Notifications