ஈராக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி!
பாக்தாத்: உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்துள்ள ஈராக் நாட்டுக்கு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சென்றுள்ளார்.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். சன்னி முஸ்லிம்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் பல நகரங்களைக் கைப்பற்றிவிட்டனர்.

நகரங்களைக் கைப்பற்றிய கையோடு இஸ்லாமிய ஷரியத் ஆட்சியையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள். மேலும் தலைநகர் பாக்தாத்தை பல முனைகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்த அமெரிக்காவிடம் உதவி கோரியது ஈராக். ஆனால் சில நூறு வீரர்களை மட்டும் அமெரிக்கா பாதுகாப்பு பணிக்காக ஈராக்குக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் தலையீட்டை அண்டை நாடான ஈரான் அனுமதிக்க முடியாது என்று கூறி வருகிறது. அட்
அதே நேரத்தில் ஈராக் பிரதமர் மாலிக் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு புதிய அரசை அமைக்கவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றடைந்துள்ளார்.
ஈராக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஈராக் தலைவர்களுடன் ஜான் கெர்ரி ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications