போதை மருந்து கடத்தலில் தொடர்பு: கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மகனுக்கு 33 ஆண்டு சிறை

பிரேசில் அணிக்காக விளையாடியவர் கால்பந்து ஜாம்பவான் பீலே. இவரது மகன் எடினோவுக்கு (43) நீண்ட காலமாக போதை மருந்து கும்பலுடன் தொடர்பு உள்ளது. இதற்கு ஆதரவாக தவறான வழியில் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதற்காக இவர் மீது வழக்குபதியப்பட்டது. இதில் எடினோவுக்கு 33 ஆண்டு காலம் ஜெயில் தண்டனையை, சாவ் பாலோ கிரிமினல் கோர்ட் விதித்தது. ‘அப்பீல்' செய்யும்பட்சத்தில் இத்தண்டனை நிறுத்தி வைக்கப்படும். பிரேசிலில் உலக கால்பந்தாட்ட போட்டிகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளதால் அதுகுறித்த ஏற்பாடுகளில் பீலே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மகனுக்கு கிடைத்த தண்டனை அவரை நிலைகுலையச் செய்துள்ளது.
எடினோ தற்போது, உள்ளூர் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் தண்டனைக்குள்ளாகுவது இது முதல்தடவை கிடையாது. 1990ல் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று பைக் மீது மோதி ஒருவரை கொன்றதாக கைது செய்யப்பட்டார். 2005ம் ஆண்டுதான் அந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்தார்.












Click it and Unblock the Notifications