ஏழைகளுக்கு உதவ குவைத்தில் நாளை நடக்கும் ஆடைகள் சேகரிப்பு முகாம்
குவைத்: ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் ஆடைகள் சேகரிப்பு முகாம் நாளை குவைத்தில் நடைபெறுகிறது.
ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) ஆடைகள் சேகரிப்பு முகாமை நாளை நடத்துகிறது. இந்த முகாம் குவைத் கைத்தானில் உள்ள கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்கு முன்பு நடைபெறும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர்,
பெரியவர்/சிறியவர்/ ஆண்/ பெண் அணியக்கூடிய புதிய, பழைய(நல்ல நிலைமையில் உள்ள) துணிகள்/விரிப்புகள்/போர்வைகள் ஆகியவற்றை அளிக்கலாம்.
துணிகள், போர்வைகளை துவைத்து மடித்து பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொடுத்தல் நலம்.
இந்த முகாமில் குவைத் வாழ் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 9787 2482/ 9943 0786/ 9969 4208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.