ஜப்பானுக்கான அமெரிக்க தூதராக கென்னடி மகள் கரோலின் நியமனம்
வாஷிங்டன்: ஜப்பானுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் அதிபர் கென்னடியின் மகள் கரோலின் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 38-வது அதிபராக பதவி வகித்தவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் எப் கென்னடி. இவர் கடந்த 1961 முதல் 1963-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ந்தேதி தனது 46-வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டடார். இவரது மகளின் பெயர் கரோலின் கென்னடி.

இவரைத் தற்போது ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதராக அறிவித்துள்ளது அந்நாடு. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தனது துறை அதிகாரிகளிடம் கரோலின் கென்னடியை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அப்போது கரோலின் கென்னடி, தான் சிறுமியாக இருந்தபோது அவரை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக சந்தித்ததை பற்றி நினைவு கூர்ந்தார்.
அதன் பின்னர், தனக்கு அளிக்கப் பட்ட ஏற்பது குறித்து நிருபர்கள் மத்தியில் கரோலின் கூறியதாவது, ‘ஆசியாவில் எங்கள் நாட்டின் முக்கியமான கூட்டாளி ஜப்பான். ஒரு தூதராக ஜப்பானுடனான அமெரிக்காவின் நல்லுறவை மேலும் மேம்படுத்துவேன். இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்கரீதியிலான உறவுகளும், வர்த்தக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேம்பட பாடுபடுவேன்' எனத் தெரிவித்தார்.
சீனா, தென் கொரியாவுடன் ஜப்பானுக்கு தீவுகள் உரிமை தொடர்பான பிரச்னை தொடர்ந்து வருகிறது. ஆனால், அது குறித்து கரோலின் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. காரணம் தென்கொரியா, அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடு என்பதே ஆகும்.












Click it and Unblock the Notifications