கென்ய வணிக வளாகம் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது: ட்விட்டரில் தகவல்
நைரோபி: தீவிரவாதிகளின் பிடியில் இருந்த வணிக வளாகம் தற்போது ராணுவத்தாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது கென்ய நாட்டு உள்துறை அமைச்சகம்.
கடந்த சனிக்கிழமை மதியம் கென்ய நாட்டின் நைரோபி நகரில் வெஸ்ட்கேட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புகுந்தனர் ஷெபாப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள். அங்கிருந்த பொதுமக்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு இந்தியர்கள் உட்பட 69 பேர் வரை பரிதாபமாக பலியானார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கென்ய பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நான்காவது நாளாக நடந்து வரும் தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது, வணிக வளாகம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சம், டுவிட்டர் வலை தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘ தற்போது வணிக வளாகம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பிணை கைதிகளும் விடுவிக்கப்பட்டு விட்டதாக நாங்கள் நம்புகிறோம் என கென்ய தேசிய பேரிடர் மீட்பு மையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications