பர்த்வான் குண்டுவெடிப்பு: ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாதி ஆலம் கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக வங்கதேச தீவிரவாத இயக்கமான ஜமாத் உல் முஜாஹிதீனைச் சேர்ந்த ஷாநூர் ஆலம் அஸ்ஸாமில் கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்க மாநிலம் பர்த்வானில் கடந்த அக்டோபர் 2ந் தேதி வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆலம், அஸ்ஸாமின் நல்பரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த போது தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். வங்கதேச தீவிரவாத இயக்கமான ஜமாத் - உல்- முஜாஹிதீன் அமைப்புக்கு நிதி திரட்டுவதில் ஆலம் முக்கிய பங்காற்றியவர் எனக் கூறப்படுகிறது.
ஆலமின் மனைவி கடந்த மாதம் கைது செய்யப்பட்டுவிட்டார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சாஜித் ஏற்கனவே கைதான நிலையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications