ஜமால் கொலை எதிரொலி.. முக்கிய சவுதி அதிகாரிகளின் விசா ரத்து.. அமெரிக்கா அதிரடி!
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
Recommended Video

இஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா பதில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து உள்ளது. அமெரிக்கா இதில் தீவிரமாக இன்னும் சில நாட்களில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார்.

கொன்றனர்
இவர் அந்த தூதரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் 18 பேர் கொண்ட படையால் கொல்லப்பட்டார். கடந்த சில வருடங்களாக இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். இதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்லப்பட்டதை சவுதி அரசும் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

கடும் எதிர்ப்பு
இதனால் அமெரிக்காவில் சவுதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. அமெரிக்க அரசாங்கம் எந்த அளவிற்கு இந்த கொலையை கண்டித்ததோ அதே அளவிற்கு அமெரிக்க மீடியாக்களும் இது குறித்து எழுதியது. அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஒருவரை அழைத்து இப்படி கொலை செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று எல்லோரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

சிலரை கண்டுபிடித்தனர்
இந்த கொலையில் மொத்தம் 18 பேர் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் சிலரை அமெரிக்க அரசாங்கம் அடையாளம் கண்டு இருக்கிறது. இவர்கள் மீது சவுதி அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனாலும் தனியாக அமெரிக்காவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

விசா ரத்து
இதில் அடையாளம் காணப்பட்ட நபர்கள் பெயர்கள் வெளியாகவில்லை. ஆனால் அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5 பேரின் அமெரிக்க விசா முதற்கட்டமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இனி அமெரிக்காவிற்குள் நுழையவே முடியாது என்று கூறப்பட்டு இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications