For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஹைதீன் அப்துல் காதர் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) கடந்த 13-06-2015 அன்று அன்று தஸ்மா டீச்சர்ஸ் சொஸைட்டி அரங்கத்தில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

KIFF's meeting held in Kuwait

பொதுக்கூட்டம் ஃபோரத்தின் தமிழ் பிரிவு தலைவர் கிஃபாயதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்தது. மேலும் ஃபோரத்தின் மண்டல தலைவர் சைஃபுத்தீன் மௌலவி முன்னிலை வகித்தார்.

KIFF's meeting held in Kuwait

மாலை 6.00 மணிக்கு மௌலவி அப்துல் ராசிக் ஆலிம் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். அமீர் ஹம்சா வரவேற்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து சமூக ஒற்றுமை என்ற தலைப்பில் அபுதாகிர் அவர்கள் கீதம் உரைத்தார், விடுதலை என்ற தலைப்பில் அப்பாஸ் அவர்கள் கவிதை வாசித்தார்.

KIFF's meeting held in Kuwait

தொடர்ச்சியாக மௌலவி கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள் ரமலான் என்ற தலைப்பில் ரமலானின் சிறப்புகளை பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "சமகால பிரச்சனைகளும் தீர்வுகளும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) தமிழ் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் தனது உரையில் "இன்று இந்தியாவில் மக்கள் சந்திக்கும் குறிப்பபாக முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி எடுத்துக் கூறி அதற்கான தீர்வை அடைவதற்கான வழிமுறைகளையும் தெளிவாக விளக்கி கூறினார்".

KIFF's meeting held in Kuwait

இறுதியாக உஸ்மான் அலியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ஜாகிர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Popular front of India fucntionary Mohaideen Abdul Kader attended the programme arranged by KIFF in Kuwait on june 13th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X