அவ்வளவு பெண்கள் இருக்க.. மேடையில் அழுத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்! அந்த கோரிக்கை தான் முக்கியமே
பியாங்யாங்க்: விசித்திரமான சட்டங்களை கொண்டுள்ள வடகொரியாவில் உள்ள பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அந்த நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் மேடையிலேயே கண்கலங்கி அழுதார்.
உலகில் மர்மதேசமென அழைக்கப்படும் நாடுளில் ஒன்று வடகொரியா. இந்த நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இந்த நாட்டில் பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ளன. அதோடு கிம்ஜாங் உன் சர்வாதிகாரி போல் அந்த நாட்டை ஆட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதோடு அமெரிக்காவை எதிர்க்க பல நாடுகள் அஞ்சும் நிலையில் கிம்ஜாங் உன் அதற்கு விதிவிலக்காக உள்ளார். அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.
பரப்பளவில் வடகொரியா என்பது மிகவும் சிறிய நாடாகும். இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 2.61 கோடி மட்டும் தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக்கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்கலங்கி உள்ளார். வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்'' என பேசினார்.
இப்படி பேசும்போது கிம்ஜாங் உன் கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
வடகொரியாவை பொறுத்தமட்டில் 1970-80 காலக்கட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கிடையே தான் கடந்த 1990ல் இருப்பினும், 1990ல் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பலியானார்கள். இதையடுத்து அந்த நாட்டில் மக்கள்தொகை என்பது மேலும் சரிய தொடங்கியது.
இதையடுத்து தான் சமீபத்தில் பெண்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்ததோடு, அந்த பெண்களுக்க இலவச வீடு, மானியங்கள், இலவச உணவு, மருந்து மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கான கல்விச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளை விட அதிகம் தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications