ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குவைத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் - வீடியோ
குவைத்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குவைத் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பீட்டாவுக்கு எதிரான பதாதைகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தன்னெழுச்சியாக தீவிரமாக போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதுவரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தின் புரட்சி குரல் தமிழகத்தில் மட்டும் நின்றுவிடாமல் கடல் கடந்தும் ஒலித்து கொண்டுள்ளது. குவைத் நாட்டில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பீட்டாவுக்கு எதிரான வாசகங்களையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களையும் கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications