கராச்சியில் நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
கராச்சி:பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருக்கும் குலிஸ்தான் இ ஜவ்ஹார் பகுதியில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் வசித்து வந்த 3 மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரும், மீட்புக் குழுவினரும் சுமார் 5 மணிநேரம் போராடி 13 உடல்களை மீட்டுள்ளனர். அதில் 7 உடல்கள் குழந்தைகளுடையது. இந்த விபத்தில் பலியான 7 குழந்தைகளில் ஒன்று 6 மாத பெண் குழந்தை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஜாவித் ஜஸ்கானி தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவால் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பலியாகியுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கவலை தெரிவித்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications