ஆப்கானிஸ்தானில் பயங்கரம்.. தங்கச்சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்து 30 பேர் பலி
காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்கச்சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 பேர் மண்ணில் புதைந்து பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் வசித்து வரும் மக்கள் ஆண்டாண்டு காலமாக தங்கசுரங்கத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இதுபோன்ற தருணங்களில் அவ்வப்பொழுது விபத்துகள் ஏற்படுவதும், உயிர்பலிகள் நிகழ்வதும் வாடிக்கையான ஒன்றாகும். இந் நிலையில் மீண்டும் ஒரு விபத்து கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது.
200 அடிஆழம் கொண்ட அந்த சுரங்கத்தில் உள்ளே ஆற்று படுகையில் அவர்கள் தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் அந்த பணியில் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
விபத்தில் உள்ளே சுரங்கம் தோண்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மண் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
மற்றவர்களின் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மருத்துவ உதவிக்குழுவும் விரைவாக அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications