பெரும் சத்தம்.. 6 கிமீ உயரத்திற்கு பரவிய கரும் புகை.. இந்தோனேசியாவில் வெடித்தது ராட்சச எரிமலை.. ஷாக்
இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று திடீர் என்று வெடித்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று திடீர் என்று வெடித்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
உலகில் அதிகமாக எரிமலை இருக்கும் தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்புகள் ஏற்படும். அங்கு எரிமலை வெடிப்புகளுக்கு மக்கள் பழகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சில சமயங்களில் அங்கே பெரிய அளவில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படும். அதோடு மக்கள் அங்கிருந்து அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வெளியேறும் சம்பவங்களும் கூட அவ்வப்போது நடக்கும்.

எரிமலை வெடித்து
இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருக்கும் பெரிய எரிமலை ஒன்று அனுஜ் வெடித்துள்ளது. மவுண்ட் மெரபி என்று அழைக்கப்படும் இந்த உரிமையை வெடித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் இந்த எரிமலை உள்ளது. அங்கு இருக்கும் எரிமலைகளில் இது மிகவும் பெரிய எரிமலை என்று கூறுகிறார்கள்.

அதிக சக்தி
அதேபோல் இது மிகவும் சக்தி வாய்ந்த எரிமலை என்றும் கூறப்படுகிறது. இந்த எரிமலை கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தது. ஆனாலும் கூட இந்த எரிமலைக்கு எதிராக 3ம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த எரிமலை மொத்தமாக 2968 மீட்டர் உயரம் கொண்டது. இந்தோனேசியாவில் இருக்கும் 500 பெரிய ஏவுகணைகளில் இது அதிகம் சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.

கடைசியாக எப்போது
கடைசியாக இந்த எரிமலை லேசான வெடிப்பை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏற்படுத்தியது. அதன்பின் அமைதியாக மாறியது. அதற்கு முன் 2010ல் இந்த எரிமலை பெரிய வெடிப்பையே ஏற்படுத்தியது. இதனால் அங்கு இருந்த 353 மக்கள் பலியானார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் எரிமலை வெடித்து இருக்கிறது.

மீண்டும் வெடித்தது
இன்று அதிகாலை அங்கு மிகப்பெரிய சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த எரிமலை பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு 6 கிமீ உயரத்திற்கு மோசமான புகை காற்று பரவியது. அருகே இருக்கும் ஊர்களில் அதிகாமாக காற்று பரவியது. அங்கு ஜாவாவில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

என்ன எச்சரிக்கை
இதனால் அங்கு இருக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. புகை ஊருக்குள் வரும். இனிதான் ஆபத்து இருக்கிறது. மக்கள் இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications