பெரும் சத்தம்.. 6 கிமீ உயரத்திற்கு பரவிய கரும் புகை.. இந்தோனேசியாவில் வெடித்தது ராட்சச எரிமலை.. ஷாக்
இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று திடீர் என்று வெடித்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று திடீர் என்று வெடித்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
உலகில் அதிகமாக எரிமலை இருக்கும் தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்புகள் ஏற்படும். அங்கு எரிமலை வெடிப்புகளுக்கு மக்கள் பழகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சில சமயங்களில் அங்கே பெரிய அளவில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படும். அதோடு மக்கள் அங்கிருந்து அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வெளியேறும் சம்பவங்களும் கூட அவ்வப்போது நடக்கும்.

எரிமலை வெடித்து
இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருக்கும் பெரிய எரிமலை ஒன்று அனுஜ் வெடித்துள்ளது. மவுண்ட் மெரபி என்று அழைக்கப்படும் இந்த உரிமையை வெடித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் இந்த எரிமலை உள்ளது. அங்கு இருக்கும் எரிமலைகளில் இது மிகவும் பெரிய எரிமலை என்று கூறுகிறார்கள்.

அதிக சக்தி
அதேபோல் இது மிகவும் சக்தி வாய்ந்த எரிமலை என்றும் கூறப்படுகிறது. இந்த எரிமலை கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தது. ஆனாலும் கூட இந்த எரிமலைக்கு எதிராக 3ம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த எரிமலை மொத்தமாக 2968 மீட்டர் உயரம் கொண்டது. இந்தோனேசியாவில் இருக்கும் 500 பெரிய ஏவுகணைகளில் இது அதிகம் சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.

கடைசியாக எப்போது
கடைசியாக இந்த எரிமலை லேசான வெடிப்பை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏற்படுத்தியது. அதன்பின் அமைதியாக மாறியது. அதற்கு முன் 2010ல் இந்த எரிமலை பெரிய வெடிப்பையே ஏற்படுத்தியது. இதனால் அங்கு இருந்த 353 மக்கள் பலியானார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் எரிமலை வெடித்து இருக்கிறது.

மீண்டும் வெடித்தது
இன்று அதிகாலை அங்கு மிகப்பெரிய சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த எரிமலை பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு 6 கிமீ உயரத்திற்கு மோசமான புகை காற்று பரவியது. அருகே இருக்கும் ஊர்களில் அதிகாமாக காற்று பரவியது. அங்கு ஜாவாவில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

என்ன எச்சரிக்கை
இதனால் அங்கு இருக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. புகை ஊருக்குள் வரும். இனிதான் ஆபத்து இருக்கிறது. மக்கள் இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications