லண்டனில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்: 1 பெண் பலி; 6 பேர் காயம்
லண்டன்: லண்டனில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்குயதில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய லண்டனின் ரசல் சதுக்க பகுதியில், நேற்றிரவு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அடையாள தெரியாத நபர் ஒருவர் திடீரென அருகில் உள்ளவர்களை கத்தியால் குத்தினார். இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் ஆவேசமாக குத்தியதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கூக்குரல் எழுப்பினர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் உடனே அந்த இடத்துக்கு வந்தனர். கத்தியால் தாக்கிய நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நீஸ் நகரில் குவிந்திருந்த மக்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பிய லாரியின் மூலம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவன், ஏராளமானோரை கொன்றான். இதனையடுத்து லண்டனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மர்மநபர் கத்தி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என லண்டன் போலீசார் கருதுகின்றனர்.