பெற்ற குழந்தைகளையே தீவிரவாதிகளாக்கிய சிரியா பெண்- 5 ஆண்டுகள் சிறைதண்டனை
பெய்ரூட்: சிரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய சொந்த குழந்தைகளை தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸில் சேர்த்து பயிற்சி பெற வைத்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
சிரியாவில் உள்ள லூதான் பகுதியை சேர்ந்த பெண் ரூனாகான். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன.
இவர்களில் 8 வயது மகன் ஒருவனை ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து பயிற்சி பெறவைத்து இருக்கிறார்.
பெருமை அடித்த தாய்:
இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் பெருமை ஆக கூறியுள்ளார். மேலும் மற்ற தாய்மார்களும் தங்களது குழந்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து சண்டைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
போலீசாரால் கைது:
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து ரூனாகானை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 வது மகனின் போட்டோ ஒன்று சிக்கியது.
தீவிரவாதி போஸ்:
அதில் அச்சிறுவன் கையில் பொம்மை துப்பாக்கி, மற்றும் தீவிரவாதிகளின் புத்தகத்தை வைத்திருப்பது போன்று படங்கள் இருந்தன. இதே போன்று மற்ற குழந்தைகளின் படங்களும் பிடிபட்டன.
5 ஆண்டுகள் ஜெயில்:
இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் அவருக்கு 5 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.