இந்தோனேசியாவை மீண்டும் குலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது.
இந்தோனேசியாவின் மத்திய சுலாவேசி மாகாணத்தின் வடகிழக்காக 58 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை

கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது மையம் கொண்டு ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படாவிட்டாலும் கடந்த மார்ச் 3 ஆம் தேதியன்று சுமத்ரா தீவுப்பகுதியில் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications