மன உளைச்சலுக்கு உள்ளான மூளையை மீட்கும் மேஜிக் காளான்கள்
சிகிச்சையளிக்க முடியாத மன உளைச்சலால் அவதிப்படும் மக்களின் மூளையை மேஜிக் காளான்களின் காணப்படும் ஒருவித மயக்கத்தை தரக்கூடிய ரசாயனம் மீட்டமைக்கும் என்று பரிசோதனைகள் வலியுறுத்துகின்றன.
சிறியளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 19 நோயாளிகளுக்கு, சைகெடெலிக் மூலக்கூறு அடங்கிய சைலோசிபின் என்ற மருந்தின் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டது.
நோயாளிகளில் பாதி பேருக்கு மன உளைச்சல் ஏற்படுவது நின்று, மூளை செயல்பாட்டில் அனுபவபூர்வமான மாற்றங்களை எதிர்கொள்ள தொடங்கினர். இந்நிலை கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு நீடித்துள்ளது.
எனினும், லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த குழு, மருத்துவரின் ஒப்புதலின்றி நோயாளிகள் சுயமாகவே மருந்தை எடுத்துகொள்ள கூடாது என்று கூறியுள்ளது.
ஆய்வுகளின் பரிந்துரை
மன உளைச்சலின் போது, சைலோசிபின் மூளைக்கு மசகுப் பொருள் போல செயல்படலாம் என்று பல தொடர் சிறிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
சைலோசிபின் அவ்வாறு செயல்படும்போது, மன உளைச்சல் அறிகுறிகளிலிருந்து நோயாளிகள் தப்பிக்க அனுமதிக்கிறது.
ஆனால், மூளை செயல்பாட்டின் மீது என்ன மாதிரியான குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
நோயாளிகளுக்கு சைலோசிபின் வழங்கப்படுவதற்கு முன்னரும், நோயாளிகள் நிதான நிலைக்கு வந்த பின்னரும் இம்பீரியல் குழுவினர் எம் ஆர் ஐ ஸ்கேனை எடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு, 'சைண்டிஃபிக் ரிபோர்ட்ஸ்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மூளையின் இரு முக்கிய பகுதிகளை சைலோசிபின் பாதிக்கிறது.
ஒன்று அமிக்டாலா பகுதி மற்றொன்று நரம்புகளின் பிணையப்பகுதி.
பயம் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் அமிக்டாலா பெரும் பங்காற்றுகிறது. சைலோசிபின் உள்ளே சென்றவுடன் இந்த பகுதியின் செயல்திறன் குறைகிறது. அதேசமயம், சைலோசிபின் எடுத்து கொண்டபின் நரம்புகளின் பிணையப்பகுதி மிகவும் நிதானமாக செயல்படத் தொடங்குகிறது.
பெரியளவில் ஆய்வுகள் தேவை:
எனினும், இந்த பரிசோதனைகள் இன்னும் சிறியளவிலேயே இருக்கின்றன.
மேலும், மன உளைச்சலுக்கு சைலோசிபின் சிகிச்சையாக பயன்படுத்த முடியும் என்று ஏற்றுகொள்வதற்குமுன் பெரியளவிலான ஆய்வுகள் இதுகுறித்து இன்னும் தேவைப்படுகின்றன.
ஆனால், மன உளைச்சலுக்கான சிகிச்சையில் புதிய சிகிச்சை அணுகுமுறைகள் தேவை என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
பிற செய்திகள்:
- 'இழந்தது கால் மட்டுமே, தன்னம்பிக்கை அல்ல': காஸாவின் ஆத்மார்த்த நண்பர்கள்
- என் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்...
- மனைவியை வன்புணர்வு செய்து, குழந்தையைக் கொன்ற தாலிபன்கள்: பணயக்கைதி வாக்குமூலம்
- மீனவர் பிரச்சனை: இந்திய, இலங்கை அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?














Click it and Unblock the Notifications