மன உளைச்சலுக்கு உள்ளான மூளையை மீட்கும் மேஜிக் காளான்கள்
சிகிச்சையளிக்க முடியாத மன உளைச்சலால் அவதிப்படும் மக்களின் மூளையை மேஜிக் காளான்களின் காணப்படும் ஒருவித மயக்கத்தை தரக்கூடிய ரசாயனம் மீட்டமைக்கும் என்று பரிசோதனைகள் வலியுறுத்துகின்றன.
சிறியளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 19 நோயாளிகளுக்கு, சைகெடெலிக் மூலக்கூறு அடங்கிய சைலோசிபின் என்ற மருந்தின் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டது.
நோயாளிகளில் பாதி பேருக்கு மன உளைச்சல் ஏற்படுவது நின்று, மூளை செயல்பாட்டில் அனுபவபூர்வமான மாற்றங்களை எதிர்கொள்ள தொடங்கினர். இந்நிலை கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு நீடித்துள்ளது.
எனினும், லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த குழு, மருத்துவரின் ஒப்புதலின்றி நோயாளிகள் சுயமாகவே மருந்தை எடுத்துகொள்ள கூடாது என்று கூறியுள்ளது.
ஆய்வுகளின் பரிந்துரை
மன உளைச்சலின் போது, சைலோசிபின் மூளைக்கு மசகுப் பொருள் போல செயல்படலாம் என்று பல தொடர் சிறிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
சைலோசிபின் அவ்வாறு செயல்படும்போது, மன உளைச்சல் அறிகுறிகளிலிருந்து நோயாளிகள் தப்பிக்க அனுமதிக்கிறது.
ஆனால், மூளை செயல்பாட்டின் மீது என்ன மாதிரியான குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
நோயாளிகளுக்கு சைலோசிபின் வழங்கப்படுவதற்கு முன்னரும், நோயாளிகள் நிதான நிலைக்கு வந்த பின்னரும் இம்பீரியல் குழுவினர் எம் ஆர் ஐ ஸ்கேனை எடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு, 'சைண்டிஃபிக் ரிபோர்ட்ஸ்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மூளையின் இரு முக்கிய பகுதிகளை சைலோசிபின் பாதிக்கிறது.
ஒன்று அமிக்டாலா பகுதி மற்றொன்று நரம்புகளின் பிணையப்பகுதி.
பயம் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் அமிக்டாலா பெரும் பங்காற்றுகிறது. சைலோசிபின் உள்ளே சென்றவுடன் இந்த பகுதியின் செயல்திறன் குறைகிறது. அதேசமயம், சைலோசிபின் எடுத்து கொண்டபின் நரம்புகளின் பிணையப்பகுதி மிகவும் நிதானமாக செயல்படத் தொடங்குகிறது.
பெரியளவில் ஆய்வுகள் தேவை:
எனினும், இந்த பரிசோதனைகள் இன்னும் சிறியளவிலேயே இருக்கின்றன.
மேலும், மன உளைச்சலுக்கு சைலோசிபின் சிகிச்சையாக பயன்படுத்த முடியும் என்று ஏற்றுகொள்வதற்குமுன் பெரியளவிலான ஆய்வுகள் இதுகுறித்து இன்னும் தேவைப்படுகின்றன.
ஆனால், மன உளைச்சலுக்கான சிகிச்சையில் புதிய சிகிச்சை அணுகுமுறைகள் தேவை என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
பிற செய்திகள்:
- 'இழந்தது கால் மட்டுமே, தன்னம்பிக்கை அல்ல': காஸாவின் ஆத்மார்த்த நண்பர்கள்
- என் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்...
- மனைவியை வன்புணர்வு செய்து, குழந்தையைக் கொன்ற தாலிபன்கள்: பணயக்கைதி வாக்குமூலம்
- மீனவர் பிரச்சனை: இந்திய, இலங்கை அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications