இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... குலுங்கிய கட்டடங்களால் பொதுமக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
சோரங் : இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்தோனேஷியாவின் வட மேற்கில் உள்ள சோரங் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில், 64 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
கடந்த வாரம் அருகே உள்ள சிலியில் 8.3 ஆக பதிவான நில நடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து 13 பேர் பலியாகினர். மேலும் சுனாமி எச்சரிக்கையுட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications