ரஜினிக்கு டத்தோ விருது.. மலேசிய அரசு முடிவு!
கோலாலம்பூர்: கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ள ரஜினிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளித்துள்ளனர் மலேசிய மக்கள். அவரைப் பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல நூறுமைல் தொலைவிலிருந்தும் கபாலி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்தவண்ணன் உள்ளனர்.
தன்னைக் காணவரும் மக்களின் ஆர்வம் புரிந்து, அவர்களை அருகில் அழைத்து படமெடுத்துக் கொள்கிறார் ரஜினி. மிகுந்த ஆசையுடன் தன்னுடன் பேச வரும் அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி மகிழ்விக்கிறார்.

தமிழர்கள் என்றில்லை, மலேசிய, சீன, ஜப்பானிய மக்கள் அவரைப் பார்க்க வந்து படமெடுத்துக் கொள்வது தொடர்கிறது. படப்பிடிப்பின் இடைவேளைகளிலும் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.
இந்த நிலையில், ரஜினிக்கு மலேசிய அரசின் மிக உயர்ந்த டத்தோ விருதினை வழங்க மலாக்கா ஆளுநர் முகமது கலில் பரிந்துரைந்துரைத்துள்ளாராம். இதனை உடனடியாக மலேசிய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ரஜினி மலேசியாவிலிருந்து திரும்புவதற்குள் பிரமாண்ட விழா எடுத்து இந்த விருதினை அவருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏற்கெனவே ஜாக்கிசான், ஷாரூக்கான் ஆகியோருக்கு டத்தோ விருது வழங்க பரிந்துரைத்தவர், இதே மலாக்கா ஆளுநர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் மட்டும் ரஜினி ஒரு மாத காலம் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications