இது தான் மாயமான விமானத்தின் கடைசி தொடர்பு விவரங்கள்... ஆவணங்களை வெளியிட்டது மலேசியா
கோலாலம்பூர்: சீனா மற்றும் பயணிகளின் உறவினர்களின் வேண்டுகோளின்படி மாயமான விமானத்தின் கடைசி தொடர்பு விவரங்கள் என சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது சீனா.
கடந்த 8-ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக, இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோள் நிறுவனம் இன்மார்சாட் அளித்த தகவலை மேற்கோள்காட்டி மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
மேலும், விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீனா விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்ற ஆதாரங்களை மலேசியாவிடம் கேட்டது.

விமானம் குறித்து கடந்து போன நாட்களில் வெளியிடப்பட்ட முரண்பட்ட தகவல்களால் ஆத்திரத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 300க்கும் அதிகமானோர் நேற்று பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து மலேசியாவின் பாதுகாப்புதுறை அமைச்சரும், விமானபோக்குவரத்து அமைச்சருமான ஹிசாமுதீன் ஹூசேன் விமானத்தின் கடசி தொடர்பு விவரங்கள் என சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மார்ச் 8ம் தேதி காலை 8:11 மணிக்கு விமானம் மற்றும் செயற்கைக்கோள் சிக்னல் மூலம் அரைகுறையான தகவல்கள் மட்டுமே கிடைக்கப்பட்டது என்றும், அப்போதைய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் புரியும் படியாக இல்லை, அடுத்த சிக்னல் 9:15 மணிக்கு வரவேண்டும். ஆனால் வரவில்லை. எரிபொருள் இல்லாத நிலையில் விமானத்தில் இருந்து சிக்னல்கள் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications