For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடிய மலேசிய பிரதமர்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் மற்றும் அவரது அமைச்சர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்தியாவின் இதர பகுதிகளில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது.

Malaysian PM joins Indians for Diwali

அதேபோல இந்திய வம்சாவளியினர் அதிகம் உள்ள மலேசியாவிலும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில் கோலலம்பூரில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தீபாவளியை வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாடினர்.

கோலாலம்பூரில் நடந்த கொண்டாட்டத்தில் பிரதமர் நஜீப்பும், அவரது அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கொண்டாட்டத்திற்கு மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய வர்த்தக சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

பிரதமர் நஜீப் ரஸ்ஸாக், பைஜாமா குர்தா அணிந்து வந்திருந்தார். அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் கொண்டாட்டத்தில் கணவருடன் பங்கேற்றார்.

English summary
Malaysian Prime Minister Najib Tun Razak and his Cabinet members joined thousands of ethnic Indian Malaysians here to celebrate Diwali and said festivals provide opportunity to strengthen goodwill and harmony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X